சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்: டிஜிபி ராமானுஜம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு குறித்து சிறப்பு குழு நியமிக்கப் பட்டுள்ளதாக டிஜிபி ராமானுஜம் தெரிவி்த்துள்ளார்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர்.
மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குண்டுவெடித்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார் டிஜிபி ராமானுஜம். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
குண்டுவெடித்த இடத்தில் மூத்த அதிகாரிகள் பலர் குவிக்கப் பட்டுள்ளனர். அதிக சக்தியில்லாத குண்டுகளே வெடித்திருப்பதாகத் தெரிகிறது. உளவுத்துறைக்கு இது சம்பந்தமாக மேலும் பல விவரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இதுவரை சொல்லும் படியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும். இது தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு நியமிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை ரயில்வே போலீசார் தாக்கல் செய்வார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளதாக ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications