சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்: டிஜிபி ராமானுஜம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு குறித்து சிறப்பு குழு நியமிக்கப் பட்டுள்ளதாக டிஜிபி ராமானுஜம் தெரிவி்த்துள்ளார்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர்.
மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குண்டுவெடித்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார் டிஜிபி ராமானுஜம். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
குண்டுவெடித்த இடத்தில் மூத்த அதிகாரிகள் பலர் குவிக்கப் பட்டுள்ளனர். அதிக சக்தியில்லாத குண்டுகளே வெடித்திருப்பதாகத் தெரிகிறது. உளவுத்துறைக்கு இது சம்பந்தமாக மேலும் பல விவரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இதுவரை சொல்லும் படியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும். இது தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு நியமிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை ரயில்வே போலீசார் தாக்கல் செய்வார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளதாக ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications