சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்.. கூட்டத்தை கலைக்க சதியா?
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரைகைகு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை: இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 11.45-க்கு மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை அவசர சட்டம் மூலம் நீக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தாமே போட்டியை துவக்கி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் எழுச்சி மிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒருபுறம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்தாலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வருபவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரை வரை சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, எழும்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையிலிருந்து மக்களை அழைத்து சென்று அலங்காநல்லூரில் கூட்டத்தை கூட்ட இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications