நெல்லை புவியியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
நெல்லை: நெல்லை அருகே மாணவர்களுக்கு புவி ஆராய்ச்சி பயிற்சி நடந்து வருகிறது. இதை ஆர்வத்துடன் அவர்கள் குறிப்பெடுத்து வருகின்றனர்.
பட்டதாரி மாணவர்களுக்கு புவி ஆராய்ச்சி துறையில் ஆர்வத்தை வளர்க்க துண்டும் பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரம் பூமத்திய புவி ஆராய்ச்சி மையத்தில் நடந்து வருகிறது.
இந்த முகாமை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ துவங்கி வைத்தார். புவியியல் தொழில் நுட்ப துறை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள 60 ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பூமி குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
பின் காந்தவியல் குறித்து ஆய்வு நடைபெறும் இடங்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் மாணவர்கள் தங்கள் கருத்துகலை பரிமாறிக் கொண்டனர்.
இதில் கிருஷ்ணபுரம் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சதிஷ்குமார், டாக்டர் குருபரன், ஓருங்கிணைப்பாளர் ஏகேசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜூவா என்பவர் கூறுகையில், "இன்று புவியில் காந்தவியல் மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் தான் இயற்கை பேரழிவுக்கு காரணமாக உள்ளது. இதை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு இந்த துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த பயிற்சி நடந்தது.
தமிழகத்திலும், வெளிமாநிலத்திலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காந்தவியல் துறை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கம் அளித்தோம். மாணவர்கள் ஆர்வத்துடன் இதனை கற்று கொண்டனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications