சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
ரயில் சேவையை தென் மாவட்ட மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை பகுதி மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வரும் பிப்ரவரி மாதம் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 9.05 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06183) இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிப்ரவரி 7-ம் தேதி சிறப்பு கட்டண ரயில் (06184) இயக்கப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிப்ரவரி 14-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (00644) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது












Click it and Unblock the Notifications