மேற்கு தொடர்ச்சி மலையில் தீவிரவாதிகள் நடமாட்டமா? சிறப்பு கண்காணிப்பு படை அமைக்க டிஜிபி உத்தரவு
நெல்லை: தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு படையை அமைக்க டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பிரத்யோக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் புர்துவான் மாவட்டத்தில் ஐஎஸ் தீவிரவாதி முகமது முஸ்ரூதின் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் மனைவி குழந்தைகளுடன் ஆறு ஆண்டுகளாக தங்கியிருந்து மளிகை வியாபாரம் பார்த்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓவ்வொரு மாவட்டத்துக்கும் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க சிறப்பு படை அமைக்க டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மூன்று மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ள மாவட்டங்களான நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் மலைப்பகுதியை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படைக்காக மாவட்டம் வாரியாக டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, முதல்நிலை, இரண்டாம் நிலை காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே சென்னை பயிற்சி கல்லூரி மற்றும் அந்தந்த மாவட்ட துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்தில் ரேஞ்சர் கமாண்டோ பயிற்சி பெறறவர்கள்.
அந்தந்த மாவட்ட எஸ்பி தலைமையில் இவர்கள் செயல்படுவார்கள். நெல்லை மாவட்டத்தில் எஸ்பி விக்ரமன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்றாலம், சாமபவர் வடகரை, ராதாபுரம், புளியங்குடி, சிவகிரி ஆகிய மலைப்பகுதியில் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications