கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை! ஏராளமானோர் பங்கேற்பு!
கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
சென்னை: கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
உடல் நலக்குறைவால் பாதிப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.
மாணவர்கள் பிரார்த்தனை
கருணாநிதி நலம் பெற வேண்டி பல்வேறு இடங்களில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கருணாநிதி படித்த திருவாரூர் வ.சோ ஆண்கள் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு வழிபாடு
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தேவாலயத்தில் கருணாநிதி நலம் பெற வேண்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். புனித அன்னை ஆலயத்தில் திரண்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் கருணாநிதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் அருகே
கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். திருக்குவளை திருவாரூருக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி மருத்துவமனை
இதனிடையே கருணாநிதியை காண இன்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.