Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருளை அள்ளித்தரும் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள்...

Subscribe to Oneindia Tamil

மதுரை: அன்னை ஆதிபராசக்தி தன் மக்களை காக்க பல அவதாரங்களை எடுத்து அருளை அள்ளி வழங்கி வருகிறாள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குண்ணத்தூர் அருகே மகாசக்தி பீடத்தில் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களை தன் அருள் பார்வையினாள் காத்து வருகிறாள்.

மக்களின் நலன் காக்கவும், கண் திருஷ்டியை போக்கவும் இங்குள்ள ஸ்ரீ பஞ்சமுக பிரத்தியாங்கிர தேவிக்கு பவுர்ணமியில் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்திவ் பங்கேற்றால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை

Sri Ayiram kannudaiyal Temple

அன்னை ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடத்தில் 41 அடி உயரத்தில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. ஸ்ரீ நாகராஜர், ஸ்ரீ நாகராணி மற்றும் புற்று அம்மன் சுயம்பு பீடம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சக்தியை அறிந்து பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும் போதே டி.குண்ணத்தூர் அருகில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் மகாசக்தி மாரியம்மனின் அருளை பெறலாம்.

கோவில் அத்தனை அமைதியாய் இருக்கிறது. ஆலயத்தினுள் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள், ஸ்ரீ மகா வராஹி தேவி, ஸ்ரீ பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி ஆகிய மூன்று தேவிகளும் பிரம்மாண்டமாய் எழுந்தருளி இருக்கின்றனர்.

பவுர்ணமியில் இந்த மூன்று தேவியருக்கும் விஷேச பதார்த்தங்களைப் படைத்து, அவர்களுக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை விஷேசப் பூஜைகள் நடைபெறும் என்று கூறினார் ஆலய நிர்வாகி. பவுர்ணமி தினத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக வழங்குகின்றனர். அன்றைய தினம் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் பூக்குழி பெருவிழா நடைபெறுகிறது.

குடும்பத்தில் பிரச்சனை, தொழிலில் ஏதேனும் பிரச்சனை என்று வந்து இங்குள்ள அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.

Sri Ayiram kannudaiyal Temple

பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இங்குள்ள அம்பாள் வராஹி தேவியை வணங்கினால் தீர்வு கிடைக்கிறதாம். விவசாயத்தில் பிரச்சனைகள், புது வீடு கட்டி குடியேற முடியாப் பிரச்சனைகள், என பூமி சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் அம்பாள் வராஹி தீர்த்து வைப்பார்கள்.

ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தவிர புரட்டாசி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

மாதந்தோறும் பவுர்ணமியில் 50 கிலோ வத்தல் வைத்து யாகங்கள் நடைபெறுகிறது. குடும்ப நலத்திற்காக பிரதி வருடம் சித்திரை பவுர்ணமி அன்று அன்னைக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறும். தைப் பவுர்ணமிகளிலும் மாசி மாதங்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் என இருவரும் செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி வந்து வணங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு தை 28ம் தேதி 10.02.17, மாசி 28ம் தேதி 12.03.17 தினங்களில் இருமுடி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு உள்ளது எப்படி செல்வது?

திருமங்கலம் தாலுகா டி.குண்ணத்தூர் அருகே உள்ள சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருமங்கலத்தில் இருந்தும் டி.கல்லுப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று இறங்கலாம்.

மேலும் விபரங்களுக்கு: சக்திபுரம், புதுப்பட்டி, திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். செல்: 99941-27038, 98653-89026

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+