ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது.. அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடலோர காவல்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த 14 மீனவர்கள், ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் என 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை சிறபிடித்து செல்லும் சம்பவங்களும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 பேரும், புத்துக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications