பாம்பனில் 50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - இலங்கையைச் சேர்ந்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் கடற்பகுதியில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த கெளரிபாலன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை, கிளிநொச்சி அருகே முரசுமோடை பகுதியைச் சேர்ந்த தம்பிராஜா என்பவரின் மகன் கௌரிபாலன். இவர் நேற்று இரவு பாம்பன் கடற்கரைப் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதன் தலைமையிலான போலீஸார் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த கௌரிபாலனை விசாரித்து சோதனையிட்டனர்.
அதில் அவர் கிட்ட அரை கிலோ எடையுடைய ஹெராயின் என்ற விலையுயர்ந்த போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த போலீஸார், கௌரிபாலனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications