இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, விரட்டியடிப்பது, கைது செய்வது என்று இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.

Sri Lankan navy arrests 15 TN fishermen

இந்நிலையில் கச்சத்தீவு அருகே 15 தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்தனர்.

மேலும் அப்பகுதியில் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்கள் விரட்டியடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+