For Daily Alerts
Just In
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம் - வீடியோ
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு, எல்லைதாண்டி வந்ததாக கூறி 7 மீனவர்களை கைது செய்தனர்.
Comments
English summary
Sri Lankan Navy arrests 7 TamilNadu fishermen near Katchatheevu.