மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 7 ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் குவிந்தனர்.
அவர்கள் மண்டபம் மீனவர்கள் மீது சராமரியாக பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இதனால் உயிருக்குப் பயந்து கொண்டு மீன்பிடிப்பை நிறுத்திவிட்டு பாதியிலேயே மண்டபம் மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர்.












Click it and Unblock the Notifications