For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் ராஜகோபுரம் இடி விழுந்து சேதம் - அபசகுணம் என பக்தர்கள் பீதி

ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் ராஜ கோபுரம் இடி விழுந்து சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ஸ்ரீவைகுண்டம்: பெருமாள் கோவில் ராஜகோபுரம் இடி விழுந்து சேதமைடைந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பெருமாள் கோவில் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Sri vaikuntam Perumal temple is damaged by the thunderstorm : devotees panic

இந்நிலையில் இங்கு நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் கோவிலின் ராஜ கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் ராஜகோபுரத்தின் பின்பகுதியில் இருந்த சிற்பம் உடைந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

கோவில் ராஜகோபுரத்தில் இடி தாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடி விழுந்து ராஜகோபுரம் சேதமடைந்துள்ளது அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபுரம் சேதமைடைந்துள்ளதை அவர்கள் அபசகுணமாகவும் கருதுகின்றனர்.

English summary
srivaikuntam perumal temple damaged by thunder storm devotees panic as inauspicious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X