50 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி #Sridevi
50 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி நேற்று திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: 50 ஆண்டுகளாக திரைத்துறையில் 5 மொழிகளிலும் கலக்கு கலக்கிய நடிகை ஸ்ரீதேவி மரண செய்தி கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1963-ஆம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
நம்நாடு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மூன்று முடிச்சு
1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

ஸ்ரீதேவி ரோல் மாடல்
ஸ்ரீதேவியை ரோல் மாடலாக கொண்டு எத்தனையோ நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர்.

50 ஆண்டுகளாக...
50 ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தெற்கில் பிறந்து வடக்கில் சென்று வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது இருந்த போட்டியில் இவரும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார்.

நடிப்பு திறமை
மூன்றாம் பிறை படத்தில் அப்பாவி பெண்ணாக தனது நடிப்பை அசத்தலாக வெளிப்படுத்தியிருப்பார். 16 வயதினிலே, பிரியா, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.

விருதுகள்
சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் 2013-இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications