தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- இரண்டு மீனவர்கள் காயம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனால் புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இந்த தாக்குதல் நடத்து இருக்கின்றது.

புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் இந்த தாக்குதலில் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டு மீனவர்கள் இதில் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
இதன் காரணமாக ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சவுந்தர்ராஜ், அன்பரசன் ஆகியோர் காயம் அடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்தில்தான் இந்திய கடலோரக் காவல் படை நமது மீனவர்களை துப்பாக்கியால்சுட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications