இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தனி ஈழமும் சுயநிர்ண உரிமையும் என்னவானது?
-கே.எஸ். ராதாகிருஷ்ணன்
எதிர்வரும் ஆகஸ்ட் 17, 2015 அன்று நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அடுத்த இலங்கைப் பிரதமர் ரணிலா? ராஜபக்ஷேவா என்று முடிவு செய்யும் நிலைகள் இருந்தாலும், இந்தத் தேர்தல் குழப்பங்களையும், அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளையும் கொண்டிருக்கின்றன.
கொடியவன் ராஜபக்ஷே தனக்கு வாக்களியுங்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் தலையெடுத்து விடுவார்கள் அதைத் தடுக்க வேண்டும் என்று சிங்களப்பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகின்றார். ராஜபக்ஷேவுக்கு சீனாவின் ஆதரவு உள்ளது.

மறுபுறத்தில் ரணிலோ திரும்பவும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகளைக் குறிவைத்து பிரச்சாரம் செய்கின்றார். தமிழர்களை எப்போதும் ஏமாற்றுவதாகத் தான் ரணிலுடைய நிலைப்பாடு இருந்து வருகிறது.
இரண்டு பேருமே, தான் வெற்றி பெறுவோமா, தோல்வியடைவோமா என்ற கலக்கத்தில் தான் இருக்கின்றார்கள். துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்கள் தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நடக்கின்றன.
தமிழ் மக்கள் விரும்பும்,
1. 2009 இன அழிப்புப் போரில் ராஜபக்ஷே மீது சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணையும், புலனாய்வும்.
2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்.
3. தங்களுடைய அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு.
4. தங்களுடைய காணிகளை திரும்ப பெறுதல்.
5. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல், நில நிர்வாகம், மீன்பிடிப்பு போன்ற அதிகாரங்கள் முழுமையாக வழங்கவும்.
என்பவை பற்றி இந்தத் தேர்தல் களத்தில் எந்தப் பிரச்சார அழுத்தத்தையும் காணமுடியவில்லை.
தமிழர்கள் இவற்றையெல்லாம் விரும்பினாலும் மௌனமாக இருக்க வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களும் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான குரல்.
புதிதாக, "ஒரு நாடு இரு தேசம்" என்றும் கோஷம் எழுந்துள்ளது.
தனி ஈழம் என்னவாயிற்று? சுயநிர்ணய உரிமை என்னவாயிற்று? தமிழ்த் தலைவர்களே நீங்களாவது சற்று சிந்திக்க வேண்டாமா?
எதிர்கால ஈழத் தமிழர் சந்ததிகள் உங்களைப் பற்றி என்னவென்று வரலாற்றில் பதிவார்கள் என்று சற்றே உங்களுடைய இதயத்தைத் தொட்டுப்பாருங்கள்.
உங்கள் மனசாட்சி உரிய பதிலளிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications