பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளத்தில் உள்ள நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எந்த ஆண்டை போன்றும் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.9 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications