பத்தாம் வகுப்பு தேர்வில் தர்மபுரி ஸ்ரீவிஜய் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் முதலிடம்
Subscribe to Oneindia Tamil

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதில் 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். அதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மாணவர். முதலிடத்தை பிடித்த மாணவரின் பெயர் மகேஷ். அவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
மேலும் முதலிடம் பிடித்த 19 பேரில் 9 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் 7 மாணவிகள் தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 மாணவிகள் தர்மபுரியில் உள்ள செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
முதலிடம் பிடித்தவர்களில் ஒருவர் கூட சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications