வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? மு.க.ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள நிவாரணப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

stalin asked what happened to flood relief fund rs.500 crore

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி மக்களை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது கொளத்தூர் தொகுதியில் 5 இடங்களில் மழை வெள்ள நிவாரண மருத்துவ முகாம்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொன்வேல்புரம், சந்திர சேகர கல்யாண மண்டபம், பேப்பர் மில்ஸ் ரோடு, திரு.வி.க நகர் ஆண்டாள் அவன்யூ, ஆகிய பகுதிகளில் ஸ்டாலின், மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், கன மழையால் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பாதிப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். வெள்ள நிவாரணப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+