சசிகலாவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு… மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி

எந்தப் பதவியிலும் இல்லாத சசிகலாவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பதவியிலும் இல்லாதவர். அவருக்கு ஏன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த வீட்டில் அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வரை அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய அனைத்துப் பாதுகாப்புகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், போயஸ் கார்டனில் அரசியல் ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் இல்லாத தற்போதைய நிலையில், இவ்வளவு போலீசாரும், உயரதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருப்பது ஏன் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

Stalin demands withdrawal of security for Poes Garden again

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்ற மு.க. ஸ்டாலின் மீண்டும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார். சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்த மு.க. ஸ்டாலின் பணி நீக்கம் செய்யப்பட்ட தமது உதவியாளரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது, தமிழகம் போதிய மழையின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+