சித்திரை வீதியில் நடந்து வந்தா மு.க.ஸ்டாலின் என்று தெரிஞ்சுக்கோ...!
மதுரை: மதுரை வந்த திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காலையில் வாக்கிங் போய் மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நேற்று காலையில் மதுரை சித்திரை வீதியில் மு.க.ஸ்டாலின் நடந்து வந்ததைப் பார்த்த மதுரை மக்கள் ஆச்சரியத்துடன் அவருடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
வெளியூர்களுக்குப் போனால் அங்கு மக்களோடு மக்களாக வாக்கிங் போவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார் ஸ்டாலின். அந்த வகையில் மதுரை வந்த அவர் நேற்று அங்கு வாக்கிங் போனார்.

தேவர் ஜெயந்தி - தேர்தல் பிரசாரம்
தேவர் ஜெயந்தி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பிரசாரம் ஆகியவற்றை முன்னிட்டு மதுரை வந்திருந்தார் ஸ்டாலின். நேற்று காலை அவர் மதுரை சித்திரை வீதிகளில் திடீரன காலையில் வாக்கிங்கில் இறங்கினார்.

திமுக கலர் டிரஸ்ஸில்
திமுகவின் கருப்பு சிவப்பு நிற டிரஸ்ஸில் காலை ஆறரை மணிக்கு வாக்கிங்கை ஆரம்பித்தார் ஸ்டாலின். சாலையைரோமாக வாக்கிங் போய்க் கொண்டிருந்த பலரும் திடீரென ஸ்டாலின் நடந்துவருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

மொத்தம் 3 ரவுண்டு
சித்திர வீதிகளை மூன்று முறை சுற்றி வந்த ஸ்டாலினுடன் திமுக நி்ர்வாகிகளும் நடந்து வந்தனர். ஸ்டாலினிடம் பொதுமக்கள் பலரும் கை குலுக்கினர். செல்பி எடுத்துக் கொண்டனர்.

வாக்கிங் வித் டாக்கிங்
வழக்கம் போல வாக்கிங்காக இல்லாமல் மக்களுடன் பேசியபடியும், கும்பிட்டபடியும், புகைப்படம் எடுத்தபடியும் சித்திரை வீதிகளை வலம் வந்தார் ஸ்டாலின்.

சூடா காபி
பின்னர் கோபு அய்யங்கார் ஹோட்டலுக்குப் போய் சூப்பர் காபியை ருசி பார்த்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஸ்டாலினே டீ வாங்கிக் கொடுத்தார். பில்லையும் அவர் கட்டினார்.

மினி சித்திரைத் திருவிழா!
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ என்று சினிமா பாட்டு உண்டு.. அதே சித்திரை வீதியில் நடந்து வந்து ஸ்டாலின் ஒரு மினி திருவிழா உற்சாகத்தை அரங்கேற்றி விட்டார்.












Click it and Unblock the Notifications