சட்டசபை நிகழ்ச்சியை 'லைவ்'வாக ஒளிபரப்ப நிதி இல்லை என்பதா? ஸ்டாலின், குஷ்பு கொந்தளிப்பு
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்திருந்த தமிழக அரசு, நிதி நெருக்கடி இருப்பதால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என கூறியிருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நிதி இல்லை என தமிழக அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
TN got doesn't have money to telecast the preceding of the assembly. .but they have the money to spend at the elections,cutouts,poojas????
— khushbusundar (@khushsundar) July 2, 2015 காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நிதி இல்லையாம்.. ஆனால் தேர்தல், கட் அவுட், பூஜை செய்ய மட்டும் பணம் இருக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications