ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளிக்கே பாதுகாப்பில்ல.. மர்ம மரணங்களுக்கு காரணம் யார்.. ஸ்டாலின் கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பில்லை. அவருடைய நண்பர்களுக்குக்கும் பாதுகாப்பில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். முன்னாள் முதல்வரின் எஸ்டேட்டுக்கு பாதுகாப்பளித்தவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொட நாடு எஸ்டேஸ் காவலாளியை மர்ம நபர்கள் சிலர், அடித்து கொலை செய்து விட்டு ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக போலீசார் தீவிரமான தேடிவந்தனர். அந்த நேரம் பார்த்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

சாலை விபத்து
அதே நாளில் கனகராஜின் நண்பரான சயான் என்பவருக்கும் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் அவரது மனைவி மற்றும் குழந்தை மரணம் அடைந்தனர். நினைவிழந்த நிலையில் சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சற்று நினைவு திரும்பியுள்ள சயான் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளார்.

கேள்வி
தொடர்ந்து இதுபோன்று நடக்கும் மர்ம மரணங்கள் மற்றும் மர்ம சாலை விபத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மர்ம விபத்துகள்
இதுகுறித்து ஸ்டாலின், "முதல்வர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்' காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல. அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மாலுமி இல்லாக் கப்பல்
மேலும், கொடநாடு கொலை தொடர்பானர்கள் என்று தேடப்படும் அனைவருக்கும் அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திறமைமிக்க தமிழக காவல்துறை "மாலுமி" இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று ஸ்டாலின் காவல்துறையை விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை.. அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை












Click it and Unblock the Notifications