சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்று சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை : நீதிமன்றம் கைது செய்ய தடை இல்லை என்று தெரிவித்தும், இன்னமும் எஸ்.வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்யாதது ஏன் என்று சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பரப்பிய எஸ்.வி சேகர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், எஸ்.வி சேகரை கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை எஸ்.வி சேகர் கைது செய்யப்படவில்லை .
போலீஸாரின் துணையோடு எஸ்.வி சேகர் வலம் வருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , இன்னமும் ஏன் எஸ்.வி சேகர் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது இந்த விவகாரத்தை பேச மறுப்பு தெரிவித்த சபாநாயகர் தனபால், எஸ்.வி சேகர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், ஜூன் 20 வரை அதைப் பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஸ்டாலினை பேச விடாததாலும் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications