தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது... - ஸ்டாலின் காட்டம்
ஆளும் கட்சியினர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகின்றனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஆளுங்கட்சியினர் இருக்கின்றனர். தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது, எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் குட்கா போன்ற போதை பொருளை எடுத்து வந்ததாக ஸ்டாலின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து குட்காவை பேரவைக்கு கொண்டுவந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வரும் 28ஆம் தேதி அவை உரிமை குழு கூடுகிறது.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
ஆளுங்கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே அதை தக்க வைத்துக்கொள்ள ஆள் ஆளுக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் பிரச்சினையைப் பற்றி கவலையில்லை. இந்த சூழ்நிலையில்தான் குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழுவை கூட்டியுள்ளனர்.

துக்ளக் தர்பார்
ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை எடப்பாடி அரசு இழந்துவிட்டது. அரசியல் காழ்ப்புணர்வுடன் உரிமை மீறல் குழுவை கூட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகின்றனர் தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.

ஆளுநரிடம் கடிதம்
இதனிடையே ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தப்பின் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெரும்பான்மை இல்லை என தெரிந்த பின்னும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடவில்லை. ஆளுநரின் தாமதத்தை 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

கட்சித்தாவல் தடை சட்டம்
சட்டசபையில் நடைபெறாத நிகழ்வுக்கு சபாநாயகர் சார்பில் கட்சித் தாவல் சட்டத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளிப்பது கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக விரோதம்
முதல்வரின் தூண்டுதல் பேரிலேயே சபாநாயகர் ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். பேரவை தலைவர் முதல்வராகி விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை வைத்தே எடப்பாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெறும் போது ஆளுநர் உடனடியாக பேரவையை கூட்ட வேண்டும் என்றும், எடப்பாடி தலைமையிலான மைனாரிட்டி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications