ஓட்டுக்கு பணம் கொடுத்து விலை பேசுகிறார்கள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே. நகரில் வாக்காளர்களை ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 கொடுத்து விலைக்கு வாங்குகின்றனர் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வாக்குகளை முதல்வர், அமைச்சர்கள் விலை பேசியுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பொல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும், அரசு கஜானாவை காலி செய்த இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாக்களிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

ஆவணங்கள் வெளியானது
விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், எந்த பணம் அமைச்சருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்ற விவரம் அந்த ஆவணங்களில் உள்ளதை ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசினார். வாக்காளர்களுக்கு தர மொத்தம் ரூ.89 கோடி ஒதுக்கியதற்கான ஆதாரத்தை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பினாமி ஆட்சி
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி மோசமான நிலையில் உள்ளதாகவும், அடிப்படை பிரச்சினைகளை தீர்த்தவைக்க சட்டமன்றத்தினல் குரல் கொடுப்போம் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கிய தினகரன் போட்டியிடுவதாகவும், ஜெயலலிதா உருவத்தை சவப்பெட்டியில் வைத்து ஓ.பி.எஸ். அணி பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பதவி நீக்கம் செய்க
பணம், பிணம் வைத்து அதிமுக இரு அணிகள் பிரச்சாரம் செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பொல்லாத ஆட்சி நடைபெறுவதாக கூறிய ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

பதவி விலக வேண்டும்
ஒவ்வொரு தேர்தலின் போதும் இதே போலத்தான் அதிமுகவினர் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்றும் கூறிய ஸ்டாலின் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை பதவி விலகவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
மாநிலங்களை தங்களுக்கு கீழாக மத்திய அரசு கருதக்கூடாது! உச்சநீதிமன்ற நீதிபதி மிக தெளிவாக சொன்ன கருத்து -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications