ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க சத்துணவு திட்டங்களிலும், ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் 18 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தென்னை பயிரிடப்பட்டாலும் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 92 சதவீத தேங்காய் உற்பத்தியாகிறது. ஆனாலும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மிக குறைவாகவே செய்யப்படுகிறது.

கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தத் தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தேங்காய் விலை ரூ.15 முதல் ரூ. 28 ஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு தேங்காய் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
ஒரு கிலோ கொப்பரை தேங்காயை ரூ. 59-க்கு தமிழக அரசே கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேங்காயில் இருந்து கொப்பரை எடுத்து விற்பனை செய்யும் அளவுக்கு விவசாயிகளிடம் தொழில்நுட்பம் பிரபல்படுத்தப்படவில்லை. எனவே, கொப்பரை கொள்முதல் நிலையங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரும், சில கொப்பரை வியாபாரிகள் மட்டுமே பயனடைகின்றனர்.
சத்துணவு திட்டத்துக்கும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யவும் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர்.
தமிழக விவசாயிகள் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது வெளிநாட்டு விவசாயிகளுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படக் கூடாது. எனவே, சத்துணவுத் திட்டத்துக்கும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும். தென்னை விவசாயமும் செழிக்கும். தென்னை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தததும் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் எந்த கெடுதலும் இல்லை என்பதை தகுந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் தேங்காய் எண்ணெய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications