அசம்பாவிதங்களுக்கு இடம் தராமல் கலைந்து செல்ல தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Recommended Video
சென்னை: திமுக தொண்டர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும். எந்த அசம்பாவிதங்களுக்கும் இடம் தரக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை சீராகி வருகிறது.
மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.