சாப்பிட்டாரா ஸ்டாலின்... தயாநிதி மாறனிடம் பரிவுடன் கேட்ட மனைவி துர்கா !
சென்னை: மெரினாவில் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.
சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஈடுபட்டார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன், ஐ.பெரியசாமி, கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கைதான அனைவரும் மயிலாப்பூர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார். ஸ்டாலினிடம் கையில் எதுவும் காயம் ஏற்பட்டிருக்கிறதா எனக் கேட்டறிந்தார். பின்னர் அருகில் இருந்த தயாநிதி மாறனிடம் ஸ்டாலின் சாப்பிட்டாரான்னு கேட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினுடன் கைதான திமுகவினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.