கொளத்தூரை தக்க வைத்தார் மு.க.ஸ்டாலின்.. 37,850 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஜேசிடி பிரபாகரனை அவர் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
கொளத்தூர் தொகுதியில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிராக வலிமையான ஜேசிடி பிரபாகரனை அதிமுக களத்தில் இறக்கியிருந்தது. ஆனால் ஸ்டாலினின் செயல்பாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாக இருந்ததாலும், வெள்ள பாதிப்பின்போது திமுக சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலும், சென்னையில் வீசியுள்ள திமுக அலை காரணமாகவும் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது இது 6வது முறையாகும். இதற்கு முன்பு ஆயிரம விளக்கு தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு 4 முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் அவர் கொளத்தூருக்கு மாறி வந்து வென்றார். தற்போது தனது வெற்றியைத் தக்க வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications