மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்
மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் - ஸ்டாலின்
சென்னை: மக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறோம் என்று லோக்சபா தேர்தல் முடிவு குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு இடத்திலும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவுக்கு ஸ்டாலின் வாழ்த்தினார்.
செய்தியாளர்கள் தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தோல்வியை மக்களின் தீர்ப்பாக கருதி ஏற்கிறோம். தேர்தலில் வென்றால் வெறியாட்டம் போடுவதும், தோற்றால் துவள்வதும் திமுகவுக்குப் பழக்கம் இல்லை. வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
மக்கள் இந்த முடிவை சந்தோஷமாக எடுத்துள்ளார்கள் என்றால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்கிறோம். எங்களின் மக்களுக்கான உழைப்பை இன்னும் வலிமைப்படுத்துவோம் என்றார் மு.க.ஸ்டாலின்












Click it and Unblock the Notifications