நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் அவர்கள், 'உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர்; ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும்; புதிய அரசு ஆணை வெளியிட்டு, டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என்று தீர்ப்பு அளித்து இருக்கின்றார்.

இத்தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், செப்டம்பர் 16-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் சுழற்சி அடிப்படையில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது; எனவே, பழங்குடி இனத்தவர்கள் மற்றும் அந்தப் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர்;
செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு ஆணையிலும் இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மூன்று அரசு ஆணைகளையும் ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications