கரூரில் இன்று மாநாடு! செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் வெளியிடும் அண்ணாமலை.. பாஜக நிர்வாகி தகவல்!
கரூர்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாக கொண்டாடப்படுகிறது.
இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இதே ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இதனை சிறப்பாக கொண்டாட முடியாது என பாஜகவுக்கு தெரியும். எனவே, தங்கள் தாய் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவாவது பாஜக ஆட்சியில் இருக்கவேண்டும் என பாஜகவினர் நினைக்கின்றனர்.

எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது பாஜக. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39+1 என 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 9 தொகுதிகளில் எப்படியாவது கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியான கரூர் மாவட்டத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பாஜகவுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த மாநாடு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இது குறித்து பேசிய பாஜக சேலம் கோட்ட பொறுப்பாளரும், மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம், "இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் செந்தில் பாலாஜிக்கு எதிராக, மாநில தலைவர் அண்ணாமலை மேலும் சில ஆதாரங்களை வெளியிடலாம்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக திருவள்ளுவர் மைதானத்தில் பாஜகவினர் பந்தல் போட முயன்றபோது, திமுகவினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில்தான் மாநாடு நடத்தப்படுவதாக பாஜகவினர் கூற, பந்தல் அமைப்பதற்கு அனுமதி கிடையாது என்று திமுகவினர் கூறினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications