ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகள் சிறைபிடிப்பு.. மக்கள் அதிரடி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருள் ஏற்ற வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றவந்த லாரிகளை நள்ளிரவில் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 59-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்காக கப்பலில் இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்ட மூலப்பொருளான தாமிரத்தாது, மணல் போன்றவை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு செல்ல கனரக லாரிகள் நேற்றிரவு வந்தன.
மூலப்பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள், 3 லாரிகளை மடக்கி சிறைபிடித்தனர். அத்துடன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையினை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. ஆலைப்பொருட்கள் அத்துமீறி கொண்டுசெல்லப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications