ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய அத்துமீறலை நினைவுபடுத்திய ஸ்டெர்லைட் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் நினைவுபடுத்துகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

சில இடங்களில் போலீஸ் வாகனம் தள்ளி விடப்பட்டது. இரு தரப்பும் மோதிக்கொண்டன. இந்த காட்சிகள் 2 வருடங்கள் முன்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாட்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். அப்போது தமிழகம் முழுக்க ஆங்காங்கு போலீசார்-பொதுமக்கள் நடுவே மோதல் ஏற்பட்டது.
இதேபோன்ற சூழ்நிலையில், தூத்துக்குடியில் தற்போது நிலவுகிறது.














Click it and Unblock the Notifications