20 தமிழர் படுகொலை: தமிழில் சம்பாதித்துக் குவித்த நகரி எம்எல்ஏ ரோஜா சத்தத்தையே காணோமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக கோடி கோடியாக சம்பாதித்துக் குவித்த, இன்றைய நகரி எம்எல்ஏ ரோஜா, ஆந்திர 20 தமிழர்களின் படுகொலையைப் பற்றி வாயே திறக்காமல் உள்ளார்.

நடிகை ரோஜா தொன்னூறுகளில் தமிழில் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர், ரஜினி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் இவர் நடித்திருந்தாலும், தமிழில்தான் அதிகப் படங்கள், அதிக சம்பளம் இவருக்கு.

Still Nagari MLA Roja is not opened her mouth on 20 Tamil killings

தமிழ் சினிமா இயக்குநரான ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார்.

சினிமா பாப்புலாரிட்டியை வைத்து ஆந்திர அரசியலில் முக்கியத்துவம் பெற்றார்.

ஆரம்பத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்குத் தாவினார்.

இப்போது தமிழகத்தின் எல்லைப்புற தொகுதியான நகரி எம்எல்ஏவாக உள்ளார்.

இந்தத் தொகுதிக்கு அருகில்தான் இப்போது ஆந்திரப் போலீசார் 2ஆனால் தமிழர்களைக் கொன்ற படுபாதகச் செயல் நடந்தது.

ஆனால் இதுகுறித்து வாயே திறக்காமல் உள்ளார் ரோஜா. இத்தனைக்கும் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துதான் அங்கே அரசியல் செய்து வருகிறார். ஆனாலும் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. குறைந்தபட்சம் ஒரு இரங்கல் கூட அவர் தெரிவிக்கவில்லை.

'லதா ரெட்டி'யின் இனப் பாசம் அப்படி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+