இப்படி ஒரு பேய்க்காற்றை பார்த்ததே இல்லை: பயந்து நடுங்கும் சென்னைவாசிகள் #vardah

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பேய்க்காற்று வீசுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகிறது. தற்போது சென்னையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

Strong winds in Chennai scares people

காற்று சூழற்றியடிப்பதால் மரங்கள், மின்கம்பங்கள், விளம்பரப் பலகைகள் சாய்ந்து வருகின்றன. சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளில் இருந்தாலும் காற்றின் பேயிரைச்சல் சப்தத்தை கேட்டு பயத்தில் உள்ளனர். எங்கள் வாழ்வில் இப்படி ஒரு பேய்க்காற்றை பார்த்ததே இல்லை என்று சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+