For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

27 வயது விதவை ஆசிரியையை திருமணம் செய்வதாக வாக்களித்து ஏமாற்றிய 20 வயது மாணவன்!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து நெருக்கமாக பழகி ஒரு குழந்தைதையும் கொடுத்து விட்டு தலைமறைவான 20 வயது மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேசன்வீதியைச் சேர்ந்த வீரமலை மகள் கற்பகஜோதி (27). இவருக்கும் குணசேகரன் என்பவருக்கும் கடந்த 2010 ல் காதல் திருமனம் நடந்துள்ளது. 2012 ல் குணசேகரன் இறந்து விட்டார். இந்தத் தம்பதிக்கு சுசிப்பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது.

Student cheats woman teacher in Kulithalai

குளித்தலை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிரார் கற்பகஜோதி. அதே கல்லூரியில் முன்றாம் ஆண்டு இ.சி.இ டிப்ளமோ படித்து வருபவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியைச் சேர்ந்த மனோகரன் மகன் பார்த்தீபன் (20). இவர் தன் படிப்பு தொடர்பான பிராஜெக்ட் செய்தபோது ஆசிரியை கற்பகஜோதியுடன் பழக்கம் ஏற்பட்டு அது நெருக்கமானது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.

மேலும், கற்பகஜோதியை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்தாராம் பார்த்திபன். இதை நம்பிய கற்பகஜோதி மாணவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவரோ மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த 0.06.14 அன்று போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் பார்த்திபனை அழைத்து விசாரித்தபோது திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். இந்த நிலையில் கற்பக ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகும் திருமணம் செய்ய மறுத்து விட்டார் பார்த்திபன்.

இதையடுத்து கற்பகஜோதி, பார்த்திபனைத் தேடிப் போய்க் கேட்டபோது, பார்த்திபன், அவரது தந்தை, தாயார் சாந்தி, அண்ணன் சுதாகர், தம்பி சுபாஷ் ஆகியோர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து புதிதாக பிறந்த கைக்குழந்தையுடன் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார் கற்பகஜோதி. அதன் பேரில் போலீஸார் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது ஐந்து பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

English summary
A polytechnic student cheated a woman teacher in Kulithalai and police are searching the student and his family members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X