செங்கோட்டை அருகே வீடு விழுந்து பள்ளி மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: செங்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலியானான்.

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமின்றி பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருகிறது. இம்மழையின் காரணமாக அணைகள் நிரம்புகிறது. குற்றாலம் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

Student dies in house collapse

நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் இம்மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு அரசமரத்தடி பகுதியில் வீடு இடிந்து விழுந்து மாரியப்பன் என்பவரது 14 வயது மகன், மணிகண்டன், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டான்.

அவனை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லியும் அவர்கள் வரவில்லை. உடனடியாக இருசக்கர வாகனத்தில் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

முதலுதவி அளித்து பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உரிய சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+