திருச்சியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் பலி: ரிசார்ட் உரிமையாளர் உள்பட இருவர் கைது
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி புறநகர் பகுதியான சோமரசம்பேட்டையை அடுத்துள்ள வயலூரில் சிவபால குரு என்பவர் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இயற்கை எழில் கொஞ்சும், கிராம சூழல் கொண்ட இந்த ஹோட்டலில் செயற்கை நீச்சல் குளமும் உள்ளது.

இந்நிலையில் 7 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் 15 பேர் வரை நீச்சல் அடிக்கலாம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள மாணவர்கள், இளைஞர்கள், ஹோட்டலில் தங்குவோர் என நீச்சல் குளத்தில் குளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இதற்கு பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இந்த நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முஸ்தபா மகன் அபுதாகீர் (12). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சல்மான் (15), நிஜாம் (15) ஆகியோருடன் அந்த நீச்சல் குளத்திற்கு குளிக்க வந்துள்ளார்.
அப்போது அவர்களுக்கான நேரம் முடிந்தவுடன் புறப்படும் நேரத்தில் அபுதாகீரை காணவில்லை என்று தேடினர். இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நீச்சல் குளத்தின் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
இந்நிலையில் அபுதாகீர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கூட்டம் நெரிசல் காரணமாகவும், குளத்தில் மேல் இருந்து யாரேனும் குதித்தபோது அபுதாகீர் மீது விழுந்து அவர் மூச்சுதிணறி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்காததால்ஓட்டல் உரிமையாளர் சிவ பாலகுரு, மேலாளர் கணேசலிங்கம் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications