For Daily Alerts
Just In
பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி ரயில் மோதி பலியான சோகம்
வேலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்ற வேலூர் மாணவி ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதன்படி முதல்நாள் தேர்வை எழுதுவதற்காகச் சென்ற வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி மீது எதிர்பாராத விதமாக ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
In Vellore a plus two student killed in an train accident while she was going for the public exam.
Story first published: Monday, March 3, 2014, 12:06 [IST]