மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான மாணவி சோபியா.. தமிழிசை குறித்து வாக்குமூலம்!
பாஜக ஆட்சியை விமர்சித்த சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதவி செய்தார்.
Recommended Video

தூத்துக்குடி: பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டார். அவரின் இந்த கோஷம் பெரிய அளவில் வைரல் ஆனது.
அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆனது. இதனால் தமிழிசை அவருக்கு எதிராக புகார் அளித்தார்.

கைது
தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவோடு இரவாக சோபியா கைது செய்யப்பட்டார். அதன்பின் மறுநாள் காலை அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

புகார் அளித்தனர்
இந்த நிலையில் தமிழிசைக்கு எதிராக சோபியாவும் அவரது தந்தையும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தனர். அதேபோல் வழக்கு தொடுத்ததற்கு எதிராகவும் புகார் அளித்தனர். ஆனால் தமிழிசை மீது போலீஸ் எந்த விதமான நடவடிக்கையும் அப்போது எடுக்கவில்லை.

மனித உரிமை ஆணையம்
இதனால் சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். காவல் துறைக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் புகார் அளித்தார். இதில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், விசாரணையின் போது சோபியாவும் உடன் இருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இன்று விசாரணை
இந்த நிலையில் இன்று மூவரையும் மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. ஆணைய உறுப்பினரான நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. திருநெல்வேலியில் உள்ள ஆய்வு மாளிகையில் இந்த விசாரணை நடந்தது. போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்தும், தமிழிசை நடந்து கொண்ட விதம் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications