தண்ணீர் பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் "காளையாக்கி" அழகு பார்த்த மாணவச் செல்வங்கள்!
தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிப் போட்டு வீணாக்காமல் அதை காளை வடிவில் சிற்பமாக்க வைத்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.
சென்னை: மாணவர்களின் சிந்தனை எப்போதும் மற்றவர்களை விட வேகமாக, வித்தியாசமாக இருக்கும் என்பதை இந்த யுகப் புரட்சிப் போராட்டம் நிரூபித்து வருகிறது. தற்போது இந்த டிவீட்டும் அவர்களின் சிந்தனை மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அலங்காநல்லூரில் சிறு தீப்பொறியாக தொடங்கி இன்று சென்னை மெரீனா, கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம், சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறது ஜல்லிக்கட்டு புரட்சி. இங்கு மட்டுமா வெளிநாடுகளிலும் கூட புரட்சி வெடித்துக் கிளம்பி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The sudden change in thought process of the people is inspiring millions! Art from waste! #jallikattu pic.twitter.com/HYlXRQ0PNJ
— Abishek S (@cinemapayyan) January 22, 2017
இந்த நிலையில் மாணவர்கள் ஒரு வித்தியாசத்தை நடத்திக் காட்டியுள்ளனர். குடிக்க வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை சேகரித்து அதை காளை வடிவில் நிறுத்தி கலையுணர்வையும் வெளிப்படுத்தி எப்பூடி என்று கேட்டு சபாஷ் போட வைத்துள்ளது இந்த மாணவர் குழாம்.
சூப்பர்ல!












Click it and Unblock the Notifications