நாட்டுக்காகப் பாடுபடுவோம்.. வ.உ.சி வேடமணிந்து மாணவர்கள் உறுதி
தூத்துக்குடி: வ உ சிதம்பரனாரின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு வ உ சி போல் வேடமணிந்த மாணவர்கள் மலரஞ்சலி. நாட்டிற்காக பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுத்த மாணவர்கள்.
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ல் தன்னுடைய சுதந்திர போராட்டத்தை நிறுத்தி கொண்ட தினம்.
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்பு இருந்து வ உ சிதம்பரனாரை நினைவு கூறும் வகையில் 77மாணவர்கள் வ உ சி போல் வேடமணிந்து கைகளில் கப்பல் ஏந்தி ஊர்வலமாக சென்று வ உ சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
வ உ சியின் இல்லத்தில் நாட்டிற்காக பாடுபடுவோம் என்ற உறுதி மொழியை கோவில்பட்டி உதவி ஆட்சியர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில் உறுதி ஏற்றனர்.