கூடுதல் பள்ளிக் கட்டணம் என கூப்பாடு போடும் விஜயகாந்த் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்..
மாமண்டூர் : தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவ்வப்போது புகார் கூறும் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயகாந்த் குடும்பத்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி சென்னைக்கு அருகே மாமண்டூர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகைக்கு முறையான ரசீது கொடுப்பதில்லை என்றும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து முதலாம் ஆண்டிலேயே முறையிட்டதாகவும், 3 ஆம் ஆண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் தெரிவித்த மாணவர்கள், தற்போது 3 ஆம் ஆண்டில் கேட்டால் கல்விக் கட்டணம் குறைக்கப்படாது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ-மாணவிகளை கலைந்து போகச் செய்தனர்.
அரசியல் ரீதியாக பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் விஜயகாந்த் தனது கல்லூரியிலேயே மாணவ-மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறைதானா?
அது சரி..அரசியல் வேறு..பிசினஸ் வேறு இல்லையா?












Click it and Unblock the Notifications