ஜல்லிக்கட்டு.. கடலூர், புதுச்சேரியில் கொட்டும் மழையிலும் இளைஞர்கள் போராட்டம்
தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையிலும் மாணவர்கள் விடாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர்: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் விடியவிடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை, நாகை, கடலூர் புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதனா தடையை நீக்கக்கோரியும் பீட்டாவை இந்தியாவில் தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர் மற்றும் பனியில் அவர்கள் தொடர்ந்து இரவு பகலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று பகல் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் பெரும் அவதி அடைந்துள்ளனர். இருப்பினும் பின்வாங்காமல் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. ஆனாலும் ஏஎப்டி மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் அடாது மழை பெய்தாலும் விடாது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் தமிழக இளைஞர்கள் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications