4 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்படும் கல்வி நிறுவனங்கள். போராட்டங்களால் மூடப்படும்?
நான்கு நாட்களுக்கு பிறகு பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை: பொங்கல் பண்டிகை மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான விடுமுறைகள் முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதில் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொண்டு பண்பாட்டை பாதுகாக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. திறந்த உடன் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

விடிய விடிய போராட்டம்
அலங்காநல்லூரில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதே போன்று கொடுங்கையூரிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர் பேரணி
நாளை காலை மாணவர்கள் கலந்து கொள்ளும் பேரணி ஒன்று மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை ஆரப்பாளையம் முதல் கோரிப்பாளையம் வரை பேரணி நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளது.

வகுப்பு புறக்கணிப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

வழக்கம் போல்..
4 நாட்களுக்கு பிறகு 18ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டங்களை அறிவித்திருந்தாலும் கல்லூரி அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications