வேண்டும்.. வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்.. திருச்சியில் 2வது நாளாக தொடரும் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி திருச்சியில் இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி: பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2வது நாளாக திருச்சியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இன்று போராட்டத்தில் ஈட்டுள்ளனர். போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்போது கைவிரித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, அவசரச் சட்டத்தை அவசரமாக கொண்டு வர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் அமைப்பி னர், மாணவிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2ம் நாளாக இன்றும் திருச்சியில் ஜல்லிக்கட்டு கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
#weneedjallikattu #jallikattu #tnneedjallikatu Trichy district college students support in jallikattu.. I support #tnneedjallikatu pic.twitter.com/GLQcoZqQk6
— VGEESN RUMUGM (@vageesanp) January 11, 2017