பயங்கர விபத்தினை ஏற்படுத்தக் காத்திருக்கும் கூடங்குளம் அணு உலை – சுப.உதயகுமார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அச்சம் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மக்களுக்கான அறிவியல் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த உலை மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. மேலும், நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் ஒரு அழிவுத் திட்டம். இந்த திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications