சுப்ரமணியசாமி டூ வெற்றிவேல்...ஜெ. வாழ்வில் என்னே உன் திருவிளையாடல் முருகா...!!!
ஜெயலலிதா வாழ்க்கையில் சுப்ரமணியசாமி தொடங்கி வெற்றிவேல் வரை முருகனின் பெயரில் உள்ளவர்களினால் பல நிகழ்ந்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா இருந்த போதும் இறந்த போதும் சரி பரபரப்புகளும், மர்மங்களும் நிறைந்துள்ளன. 1996ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு போட்டது தொடங்கி அவரது மரணத்திற்குப் பின்னர் வெற்றி வேல் மூலம் வீடியோ வெளியானது வரை பரபரப்புதான்.
ஜெயலலிதா வாழ்க்கையில் முருகப்பெருமான் பெயர் கொண்டவர்களினால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடந்துள்ளன. இதை வைத்தே வாட்ஸ் அப்பில் ஒரு சுவாரஸ்ய கவிதை வலம் வருகிறது.

முருகா...
சுப்பிரமணியசாமியாக வந்து கேஸ் போட்டாய்.....
குமரசாமியாக வந்து விடுதலை செய்தாய்....
சரி, உயிர் இழந்தால் விட்ருவேன்னு பார்த்தா....!!!
பழனிச்சாமியாக வந்து ஆட்சி செய்கிறாய் ....
ஆறுமுகசாமியாக வந்து விசாரணை நடத்துகிறாய்..
வெற்றிவேலாக வந்து வீடியோ வெளியிடுகிறாய்..
தமிழ்கடவுளே முருகா...ஞானபண்டிதா..!!!












Click it and Unblock the Notifications